சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Thursday, April 30, 2015

கல்யாண்ஜியின் கவிதைகளும் காற்றில் மிதந்த அனுபவங்களும்.


                                  பரபரக்கின்ற இந்த உலகத்தினூடே சைக்கிளில் ஒரு எளிய பயணம் செய்வதைப் போன்றது கல்யாண்ஜியின் கவிதை வாசிப்பது. நீங்கள் அன்றாடம் நடந்து போகும் தெருவில் நின்று தர்பூசணி விற்பவரையும், சப்புக்கொட்டி குச்சி ஐஸ் தின்னும் குழந்தையையும், உங்களின் பார்வை படவேண்டுமென்று கைவிட்டு சைக்கிள் ஓட்டிக் காட்டும் இளவட்டச் சிறுவனையும் என்றைக்காவது உன்னித்து கவனிதிருக்க்கீற்களா? கவலைகளால் நிரப்பப்பட்ட உங்கள் மனம், கண்டதை எண்ணியபடி, தினந்தோறும் நிகழும் இவ்வரிய ஆச்சரியங்களை தவரவிடிகிறது. கல்யாண்ஜி ஒரு குழந்தையின் பார்வையிலிருந்து உலகத்தை பார்க்கிறார். தான் கண்டதையெல்லாம் அப்படியே ஒரு குழந்தையின் வண்ணம் எழுதுகிறார்.
அவர் கவிதை நூலை வாசிக்க ஆரம்பிக்கையில் முகத்தை உர்ரென்று விரைப்பாக வைத்து, ஏதோ செயற்கரிய காரியதத்தை செய்ய முற்படும் சிந்தனையாளன் போல உட்கார்ந்தேன். வாசிக்க, வாசிக்க மெல்ல என்னை அவர் உலகிற்கு அழைத்துச் சென்றார், விரைப்பாக இருந்த என் முகம், நெருப்பு பட்டு உருகும் மெழுகு போல மெல்ல தன் நிலையை மாற்றி இதழ் விரித்து புன்னகைக்க ஆரம்பித்தது. எளிய வாழ்க்கையின் பேரானந்தத்தையும், சொற்ப விசயங்களில் சொர்க்கத்தையும் எனக்கு காட்டியது. தன்மை, இயல்பு இவற்றின் முழு அர்த்ததையும் அறிந்து ஒரு ஞானி போல உணர முடிந்தது.
என்னைக் கடந்து சென்றவர்கள் என்னுள் வீசிச்சென்ற குப்பையை மனதிற் சுமந்து ஒரு நடமாடும் குப்பைத் தொட்டி என வாழ்ந்த வாழ்க்கையை துகிலுரித்துக் காட்டியது. ஆக ஒரு குப்பைத் தொட்டி தன்னை சுத்தப் படுத்திக் கொண்டது கல்யாண்ஜியின் கவிதைகள் படித்து. ஒரு எறும்பை உற்றுக் கவனிக்கச் செய்தது, ஒரு புறாவின் ஒரு நாள் வாழ்க்கை எப்படி இருக்கும் என யோசிக்கச் செயத்தது. என் மனம் முழுக்க இறக்கைகள் உதிர்ந்து கிடக்கிறது இப்போது. அதை ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறேன்.
கவிதை வாசிக்க புலமையோ, கவி ஞானமோ ஒரு பொருட்டே அல்ல, பிறக்கும் போது எனக்குள் இருந்த புனித ஆன்மா ஒன்றே போதுமானது. ஒரு குழந்தையின் பார்வையில் உலகைப் பார்க்க கற்றுக் கொடுத்தது. அந்தக் குழந்தைத் தனத்தை தக்கவைத்துக் கொள்ள சமூக வலைத்தளங்களிலிருந்தும், தற்கால தமிழ் சினிமாக்களிலிருந்தும், ஊடகங்களிலிருந்தும் கொஞ்சம் விலகி நிற்பது அவசியமான ஒன்றாகிறது.
மீனைப்போல இருக்கிற மீன் - கல்யாண்ஜி (சந்தியா பதிப்பகம்)
மணல் உள்ள ஆறு - கல்யாண்ஜி (சந்தியா பதிப்பகம்)

No comments:

Post a Comment

சொலவடை