சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Thursday, May 14, 2015

சூடான் எனும் நான் மனிதனால் வஞ்சிக்கப்பட்டவன்

இந்த உலகத்தின் கடைசி ஆண் வெள்ளைக் காண்டாமிருகமாகிய சூடான், தன் தலையை தொங்கவிட்டு நிற்கிறான்.தனிமை அவன் கண்களை கவ்வி நிற்கிறது. பழுப்பேறிய அவன் வாய் இந்த உலகத்தின் முகத்தில் காறி உமிழத் துடிக்கிறது. தன் இனத்தின் கடைசி நம்பிக்கையான சூடானோடு இனம் சேர விலங்கியல் பூங்காவில் மேலும் இரண்டு வெண் காண்டாமிருகங்கள் இருக்கின்றனவாம், இருந்தும் 42 வயதான் சூடானால் இனப்பெருக்கும் செய்ய முடியுமா என்பது இன்றுவரை சந்தேகத்திற்குரிய கேள்வியாகவே விலங்கியல் ஆர்வலர்களிடையே நிலவுகிறது. அப்படி அவனால் முடியாவிட்டால், நீங்கள் இந்தப் புகைப்படத்தில் பார்க்கும் சோக முக சூடானே உலகின் கடைசி வெண் ஆண் காண்டாமிருகம். இவனுக்கு தான் தான் கடைசி என்று கூடத் தெரியுமோ? என்னவோ. கடந்த 2014 ஆண்டில் மட்டும் இவனுடைய இனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அவர்களின் கொம்பிற்காக வேட்டையாடப் பட்டிருக்கிறார்கள், அவர்களின் வெண்கொம்பு மருத்துவ குணம் வாய்ந்ததென்று, வியட்நாம் போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் நம்பப்படுகிறதாம். இவனுக்கும் பாதுகாப்புத்தராவிட்டால், கொடூரர்கள் இவனையும் வேட்டையாடி விடுவார்கள் என்பதானால் இவனுக்கு இப்போது ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அளிக்கிறது ராணுவம். தன்னைச் சுற்றி இருப்பவர்கள், தன்னை காக்க இருக்கிறார்களா, அழிக்க இருக்கிறார்களா என்று கூட அவன் ஆராய்ச்சி செய்ய விரும்பாதவனாய், இழந்த தன் இனத்தை நினைத்து , நிலம் நோக்கி தன் தலையத் தொங்க விட்டபடி நின்று கொண்டிருக்கிறான். தான் வாழ எதையும் அழிக்கலாம், எப்படியும் வியாபாரம் செய்யலாம் என்றொரு அரக்க குணம் மனிதனைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருப்பதன் விளைவே இந்தக் கடைசி சூடான். இவன் கடைசி என்று எழுதும் போதே எங்கோ வலிக்கிறது, இவன் இனம் பெருக பிரார்த்திப்போமாக.
வெறும் பிரார்த்தனை எதையும் செய்து விடப்போவத்தில்லைதான், ஆனால் அது மனத்தினுள் நல்ல உணர்ச்சிகளை உருவாக்க வல்லது. உணர்ச்சிகளற்ற ஒரு சமுதாயமாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அடுத்தவனுக்காக, தன் பூமிக்காக, தன் இயற்கைக்காக பிரார்த்திக்கவாவது செய்வது, உங்களுக்குள் இருக்கும் மனிதத்தை எள் அளவாவது நிலைத்திருக்கச் செய்யும்.
மரமும், நதியும், விலங்கும், பறவையும், பூச்சியும் இல்லா ஒரு வெற்றுச் சாம்பல் தேசத்தில் கட்டிடங்களுக்கு மத்தியில் ஒரு கூட்டம் உலாவும் நேரம் வெகு தொலைவில் இல்லை, அக்கூட்டத்தின் பெயர் மனிதன் என்பதிலிருந்து மருவி, பிணம் என்றாகியிருக்கும் அப்போது.
தகவல் நன்றி : http://www.theguardian.com/…/12/last-male-northern-white-rh…

Thursday, April 30, 2015

கல்யாண்ஜியின் கவிதைகளும் காற்றில் மிதந்த அனுபவங்களும்.


                                  பரபரக்கின்ற இந்த உலகத்தினூடே சைக்கிளில் ஒரு எளிய பயணம் செய்வதைப் போன்றது கல்யாண்ஜியின் கவிதை வாசிப்பது. நீங்கள் அன்றாடம் நடந்து போகும் தெருவில் நின்று தர்பூசணி விற்பவரையும், சப்புக்கொட்டி குச்சி ஐஸ் தின்னும் குழந்தையையும், உங்களின் பார்வை படவேண்டுமென்று கைவிட்டு சைக்கிள் ஓட்டிக் காட்டும் இளவட்டச் சிறுவனையும் என்றைக்காவது உன்னித்து கவனிதிருக்க்கீற்களா? கவலைகளால் நிரப்பப்பட்ட உங்கள் மனம், கண்டதை எண்ணியபடி, தினந்தோறும் நிகழும் இவ்வரிய ஆச்சரியங்களை தவரவிடிகிறது. கல்யாண்ஜி ஒரு குழந்தையின் பார்வையிலிருந்து உலகத்தை பார்க்கிறார். தான் கண்டதையெல்லாம் அப்படியே ஒரு குழந்தையின் வண்ணம் எழுதுகிறார்.
அவர் கவிதை நூலை வாசிக்க ஆரம்பிக்கையில் முகத்தை உர்ரென்று விரைப்பாக வைத்து, ஏதோ செயற்கரிய காரியதத்தை செய்ய முற்படும் சிந்தனையாளன் போல உட்கார்ந்தேன். வாசிக்க, வாசிக்க மெல்ல என்னை அவர் உலகிற்கு அழைத்துச் சென்றார், விரைப்பாக இருந்த என் முகம், நெருப்பு பட்டு உருகும் மெழுகு போல மெல்ல தன் நிலையை மாற்றி இதழ் விரித்து புன்னகைக்க ஆரம்பித்தது. எளிய வாழ்க்கையின் பேரானந்தத்தையும், சொற்ப விசயங்களில் சொர்க்கத்தையும் எனக்கு காட்டியது. தன்மை, இயல்பு இவற்றின் முழு அர்த்ததையும் அறிந்து ஒரு ஞானி போல உணர முடிந்தது.
என்னைக் கடந்து சென்றவர்கள் என்னுள் வீசிச்சென்ற குப்பையை மனதிற் சுமந்து ஒரு நடமாடும் குப்பைத் தொட்டி என வாழ்ந்த வாழ்க்கையை துகிலுரித்துக் காட்டியது. ஆக ஒரு குப்பைத் தொட்டி தன்னை சுத்தப் படுத்திக் கொண்டது கல்யாண்ஜியின் கவிதைகள் படித்து. ஒரு எறும்பை உற்றுக் கவனிக்கச் செய்தது, ஒரு புறாவின் ஒரு நாள் வாழ்க்கை எப்படி இருக்கும் என யோசிக்கச் செயத்தது. என் மனம் முழுக்க இறக்கைகள் உதிர்ந்து கிடக்கிறது இப்போது. அதை ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறேன்.
கவிதை வாசிக்க புலமையோ, கவி ஞானமோ ஒரு பொருட்டே அல்ல, பிறக்கும் போது எனக்குள் இருந்த புனித ஆன்மா ஒன்றே போதுமானது. ஒரு குழந்தையின் பார்வையில் உலகைப் பார்க்க கற்றுக் கொடுத்தது. அந்தக் குழந்தைத் தனத்தை தக்கவைத்துக் கொள்ள சமூக வலைத்தளங்களிலிருந்தும், தற்கால தமிழ் சினிமாக்களிலிருந்தும், ஊடகங்களிலிருந்தும் கொஞ்சம் விலகி நிற்பது அவசியமான ஒன்றாகிறது.
மீனைப்போல இருக்கிற மீன் - கல்யாண்ஜி (சந்தியா பதிப்பகம்)
மணல் உள்ள ஆறு - கல்யாண்ஜி (சந்தியா பதிப்பகம்)

Some Observations on O.K Kanmani

                                Vairmathu Started reusing his lyrics I guess, in O.K Kanmani for the song "Theera Ula" , he wrote a line "Pirivondru nerum enru theriyum kanna , en piriyathai athanaal kuraikka maatten", the same line have already been used in "Megangal Ennaith Thottu" Song from Amarkalam. Not criticizing him, just observed this while watching the movie. By the way, the movie is too good, especially I’ve got attracted with the sequences of Ganapathy mama and Bavani aunty (Prakash Raj & Leela Samson) than the protagonist’s. Three main things I want you to observe in the movie, that may give you ecstasy,
1. A. R. Ameen’s debut song “maula wa sallim”, my soul started evaporating after hearing this and still I am not able to get in.
2. P.C. Sreeram’s Red Pixel cinematography, you can observe a dark Red color all over the movie, the color of Red is so dark and sometimes irritates eye, but P.C. Sir handled that color in a coolest way so that it made love with my retina.
3. Anand Krishnamoorthi’s Sound engineering, which is indeed for a cinema to make a viewer to travel with the characters. It is so natural.

P.S. Mani Ratnam presented it well, as I am not discussing any technical aspects of the movie, don’t consider this as a Review, these are just my opinions.

ஊர்தலும் ஊர்தல் நிமித்தமும்


என் தாடைக்கும், காது மடல்களுக்குமான
ஏகப்பட்ட எறும்புக் கிலோமீட்டர்களை
நடந்து கடந்து கொண்டிருந்தது ஒரு சிற்றெறும்பு.
தட்டிவிட கைகள் தொக்கி நின்றாலும்,
சிந்தனை மறத்து மறந்தது.
என் கன்னங்களில் அடிமேல் அடியெடுத்து,
ஆனந்தமாய் ஊர்ந்த்து கொண்டிருந்தது, எறும்பு.
என் கன்னக்குழிதாண்டி வருகையில்
சிறுதாடி மயிர் இடறி பாதைமாறியது,
சுற்றிச் சுழலி ஒரு வட்டமடித்து, மீண்டும்
காதுமடல் நோக்கி தன் பயணத்தை திருப்பியது.
ஊர்தலின் சுகத்தை எறும்பும்,
ஊரப்படும் பொருளின் ஏகாந்ததை நானும்
ஒரு சேர அனுபவிக்கையில் என் காதுமடல்
வந்து சேர்ந்தது அந்த்ச் சிவப்பு சிப்பாய்.
மெல்ல என் காதுகளில் அமர்ந்து
ரகசியம் சொல்வது போல் சொன்னது
கவிதைக்கு நடையென்றேதும் இல்லை
ஊர்தலும், ஊறித் திளைத்தலும் மட்டுமே உண்டென்றது.

Friday, March 6, 2015

மாதம் மூன்று புத்தகங்கள் -1

மாதம் 200 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்குவது மற்றும் அதைப் படித்து முடிப்பது என்ற சபதத்தை எடுத்தாயிற்று. அந்த வகையில், பிப்ரவரியில் படித்து கிழித்தவை,

1. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

நாகர்கோவிலின் தெற்கு மூலையில் ஒய்யாறமாய் வீற்றிருந்த ஒரு புளியமர்த்தை சுற்றி நடக்கும் கதையே இது. 1960 களில், அதாவது இன்றிலிருந்து 55 வருடங்களுக்கு முன்னால் மிகப் பெரும் தொலைநோக்கு பார்வையுடன் கதை எழுதப் பட்டிருக்கிறது. மனித மனத்தின் கோபம், வன்மம், காமம், பேராசை, ஒழுக்கம், அழுகை, சிரிப்பு, பொறாமை என அனைத்து உணர்வுகளையும் ஒரு புளியமரத்தை சுற்றிச் சுழல விடுகிறார். அந்தப் புளியமரத்தைச் சுற்றி நடக்கும் அரசியலையும் அண்மைச் சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஆசிரியரை ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்லலாம். இன்று வரை அரசியலின் நிலைமை அதே அறுபதுகளின் நிலையிலேயே உள்ளதென்பதே மறுக்க இயலாத உண்மை. கதையின் நடை மிகத்தீவிரம், எந்த இடத்தில் இது அறுபதுகளுக்கான கதை என்ற சலிப்பை ஏற்படுத்தவே இல்லை.

2. ஓஷோ , ஒரு வாழ்க்கை # பாலு சத்யா - கிழக்கு பதிப்பகம்

சுருக்கமாகச் சொல்லப்போனால் “Osho's Life in a Nutshell", தெளிவாக ஆராய்ந்து அறுக்காமல் எழுதியிருக்கிறார். அவரை ஒரு மகானாகக் காட்டி, ஓப்பனிங் சாங் வைத்து ஒரு கமர்சியல் படமாக எடுக்காமல், அழகியலோடு யதார்த்த நடையில் எழுதப்பட்ட புத்தகம். ஒஷோப் பற்றி படிப்பது, ஹோலிப் பண்டிகைக்கு பாங்கு அடிப்பதும் ஒன்றே. ஆனந்தம், பரம ஆனந்தம். அவரை ஒரு பைத்தியக்காரன் என்றே பாதி படித்து முடித்தபோது எண்ணத் தோன்றியது, ஆனால் முழுவதும் முடித்தபோது, இந்தியாவின் தலைசிறந்த சுய சிந்தனைக்காரர் என்பதை ஒத்துக் கொள்ளமுடிகிறது. மேலும் அவரைப் பற்றி புத்தகங்களையும் படிக்கத்தூண்டுகிறது. அவரைப் பற்றி அறிய முனைவோருக்கு , இது ஒரு “கற்றுக்குட்டியாளர்களுக்கான கையேடு”.

3. மூங்கில் மூச்சு - சுகா. ஆ. வி பதிப்பகம்

ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே படித்து முடித்தது என்றாலும், திருநவேலியயையும், மாஸ்ட்டரையும் நினைவு கூர்ந்து கொள்ள, வசதியான கனவுப் புத்தகம். தினசரி தூங்குமுன் ஒரு அத்தியாத்தைப் படித்து முடித்து அந்த நினைவுகளிலே தூங்கிப்போவது என்பது ஒரு அலாதி சுகம். திருநவேலியிலிருந்து தள்ளி இருக்கும் நெல்லைக் காரர்கள் அனைவரும் வைத்துக் கொள்ள வேண்டிய புனித நூல் “மூங்கில் மூச்சு”. நெல்லைப் பக்கமே வராதவர்கள், இதைப் படித்து நெல்லையைப் பற்றி சுகாவுடனும் , அவர் நண்பர் குஞ்ஞுவுடனும் வாழ்ந்து தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரிக்கான புத்தகமான அஞ்ஞாடியை ஆராய்ந்துகொண்டிருக்கிறேன், அதைப் படிப்பதைவிட அதில் மூழ்கி அந்த ஆயிரத்து இருநூறு பக்ங்களில் குளிக்கவே எனக்கு விருப்பம்.

மார்ச்சுக்கான புத்தகங்களும் வந்தடைந்துவிட்டன, அடுத்தமாதம் பார்க்கலாம். அதுவரை காற்றில் பறக்கிறேன் , கல்யாண்ஜியுடன் வருகிறேன்.

சொலவடை