மலையாள கவிஞர் குஞ்நுண்ணி
மற்றும் மறைந்த தமிழ் எழுத்தாளர் நகுலனின் கவிதைகளை படிக்க நேர்ந்தது.
இருவரின் கவிதைகளும் நம்மை எங்கெங்கோ கொண்டு போய் நிறுத்துகிறது. இருவரின்
எழுத்து நுட்பமும் மிகவும் புத்திசாலித்தனமானது. படித்தவுடன் புரிந்து
கொள்ளும் வகையில் இருப்பதில்லை. அவர்களது கவிதைகள். வாசிப்பாளரை மிகுந்த
சிந்தனைக்கு உட்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான
அனுபவத்தையும் உண்மையையும் உணர்த்துகிறது. இவர்களது கவிதைகளுக்கென்று தனி
விளக்கம் எதுவும் கிடையாது. அது வாசிப்பாளரை பொறுத்து மாறுகிறது.பெரும்பாலும் அவர்களது கவிதைகள் ஐந்து அல்லது ஆறு வரிக்குள்ளாகவே அமைந்து விடுகிறது
அவர்களது கவிதைகள் சிலவற்றை படிக்க கீழே சொடுக்கவும்
குஞ்நுண்ணி கவிதைகள்.
நகுலனின் பத்துக் கவிதைகள்
நகுலன் சொன்னது : ஒரு எழுத்தாளன் என்பவன் வாசிப்பவனுக்குள் சென்று அவனையும் எழுத தூண்ட வேண்டும்.
அதுனால நானும் சில குறுங்கவிதைகள் எழுத முயற்சி செய்தேன். அவற்றின் விளைவு கீழே,
நிழலின் பிம்பம்
மெல்ல இறங்கி
ஒரு மின்சார விளக்கின்
அடியில் சென்று ஒளிந்துகொண்டது
(2) சில நேரங்களில்
என் நிழல் கூட
என்னுடன் சேர்ந்து கொள்கிறது
ஆனால் என் பிம்பம்
எப்பொழுதும்
எனக்கெதிராகவே உள்ளது.
(3) தொலைந்ததை தேடினேன்
தொலைத்ததெல்லாம் கிடைத்தது
தொலைந்ததை தவிர!!!
(4) சிட்டுக்குருவி பழத்தை
பங்கிட்டுக் கொள்கிறது,
பூச்சிகள் என்னை
ஒரு பொருட்டாக
நினைக்காமல்
ஏறி விளையாடுகின்றன
பெருமையாக இருக்கிறது
(5)ஊருக்கு தெரிந்து
புகைப்பதை நிறுத்தி
ஐந்து நாட்களாகி விட்டது
எல்லாமும் சரியாய்தான்
போய் கொண்டிருந்தது
ஆறாம் நாளில் கையரிப்பு
யாருமில்லா ஓர் இரவில்
ஊருக்குத் தெரியாமல்
கிளம்பி விட்டேன்
கையில் சிகரட்டுடன்
பற்ற வைத்தேன்
பார்த்து விட்டார்
கடவுள்.
புகைப்பதை நிறுத்தி
ஐந்து நாட்களாகி விட்டது
எல்லாமும் சரியாய்தான்
போய் கொண்டிருந்தது
ஆறாம் நாளில் கையரிப்பு
யாருமில்லா ஓர் இரவில்
ஊருக்குத் தெரியாமல்
கிளம்பி விட்டேன்
கையில் சிகரட்டுடன்
பற்ற வைத்தேன்
பார்த்து விட்டார்
கடவுள்.
(6) வானிலையை
பொறுத்தே
அமைகிறது
பலரின் மனநிலை
வானிலையை
ReplyDeleteபொறுத்தே
அமைகிறது
பலரின் மனநிலை!!
-Nice one,தொடர்ந்து எழுதுங்க:)