- என்னுடைய சந்தேகம் எனக்கு தமிழ் எந்த அளவிற்கு தெரியுமென்பதில் இருந்து ஆரம்பிக்கிறது.இதற்கு விடை காண இங்கு சில வினாக்களை வைக்கிறேன் .
- தமிழென்ற மொழிக்கு தமிழ் என்ற பெயர் எப்போது வைக்கப் பட்டது. எந்த சங்க கால இலக்கியத்தில் முதன் முதலில் தமிழ் என்ற சொல் பயன் படுத்தப் பட்டது.
- உதாரணமாக திருக்குறளில் தமிழ் என்ற சொல் ஒரு இடத்தில் கூட பயன் படுத்தப் படவில்லை. அதற்காக அது தமிழில் எழுதப் படவில்லை என்று சொல்லவில்லை,தமிழைப் பற்றி எழுதவில்லை.
- கேரளத்தை ஆண்டவர்கள் சேரர்கள் என்றால் தமிழ் சங்க கால இலக்கியங்களில் அவர்களின் பங்கு என்ன?
- பழந்தமிழ் இலக்கியமான பழமொழியில் வரும் ஒரு வாசகம் இது "நாய் பெற்ற தெங்கம்பழம்" ,மலையாளத்தில் தெங் என்றால் தேங்காய்.
- அப்படியானால் பழந்தமிழ் நூல்கள் பல தென்னிந்தியாவிற்கு பொதுவான ஒரு திராவிட மொழியில் எழுதப் பட்டது என்று வைத்துக் கொள்ளலாமா?.
- நம் சங்க இலக்கியங்களை மலையாளிகள் ஆர்வம்கொண்டு படிக்கிறார்களா?
- திருக்குறள், புறநானூறு,கலிங்கத்துப் பரணி முதலிய சங்க இலக்கியங்களை என்னால் உரை இல்லாமல்படிக்க முடிவதில்லை. அப்படிஎன்றால் நான் தமிழில் தான் பேசுகிறேனா இல்லை நான் பேசுவதை தமிழ் என்று சொல்லி கொள்கிறேனா?
- தமிழக கேரள எல்லைப் பகுதியான பொதிகை மலையில் வாழ்ந்த அகத்தியர் தமிழுக்கு முதன் முதலில் வரி வடிவம் தந்தார் என்று சொல்லப் படுகிறது,ஆகவேதான் நமது வரிவடிவமும் மலையாள வரி வரிவடிவமும் மிகுந்த அளவிற்கு ஒற்றுமையாக காணப்படுகிறதா?
- அப்படியெனில் நமக்கும் அவர்களுக்கும் பொதுவில் ஏதும்சங்க இலக்கியங்கள் எழுதப் பட்டிருக்கிறதா?
- சமஸ்க்ருதம் , தெலுகு, கன்னடம் ,மலையாளம் போன்ற மொழிகளின் சங்க இலக்கியங்கள் என்னென்ன?
- கம்பருக்கு வால்மீகியின் ராமாயணம் எப்படி கிடைத்தது?
- நவீனத்துவம்,பின் நவீனத்துவம் என்று பேசியே நாம் பழங்கால இலக்கிய பாதையில் இருந்து சிதறிவிட்டோமா?
தமிழன் என்ற கர்வத்தை என் தலையில் இருந்து சற்று இறக்கி வைத்து இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கண்டு பிடிக்க வேண்டும்.