சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

என் தேசம் என்னும் எவர்சில்வர் தட்டு

                                 சரியாக மதியம் 12 :30 மணி அளவில் ஒலித்தது அந்த மெஸ்ஸின்  மணி  ,மணி அடிச்சா சோறு என்பது போல தட்டை தூக்கிக் கொண்டு ஓடினான் அவன், மெஸ்ஸில் நுழைந்து அவன் எடுத்து வந்த எவர்சில்வர் தட்டில் சோற்றை நிரப்பி , சாம்பார் வாளியில் வலை வீசி மீன்களை பிடிப்பதை போல முருங்கைக்காய்களை பிடித்து தட்டில் போட்டு, அப்பளங்களை அடித்து நொறுக்கி தட்டில் தூவி புடலங் காய் கூட்டை சோற்றுடன் கலந்து , அந்த தட்டை எடுத்து மூன்றாவது டேபிளில் போய் அமர்ந்தான். அவனுக்கு முன்னே மூன்றாவது டேபிளில் சாப்பிட்டு போனவனின் எச்சில் உணவுப் பருக்கைகள் அவன் தட்டின் பின்னே ஒட்டிக் கொண்டன, மோர்,ரசம் என்று பல ரவுண்டு வந்து  ஒரு வழியாக சாப்பாட்டை முடித்தான். தட்டின் முன்பக்கத்தை  நன்றாக  சோப்புப் போட்டு கழுவியவன் , பின் பக்கத்தை சுத்தம் செய்ய மறந்து விட்டான். மெஸ்ஸில் இருந்து வெளியில் வந்தவன், சாப்பாடிற்காக வெளியில் காத்து இருந்த இன்னொரு நண்பனிடம் தட்டை கொடுத்தக் கிளம்பினான். அது ஒரு மாணவர் தங்கும் விடுதி, பலருக்கு சாப்பாடு ஒரே தட்டில் தான். பின் இரண்டாமவனும் பசி வெறியல் தட்டின்  முன் பக்கத்தை நன்றாக கழுவி பின்பக்கத்தை மறந்து விட்டான். அவனும் சாப்பிட்டுச் சென்றான், இப்போது தட்டின் பின்புறம் மேலும் அழுக்காகி இருந்தது.பின்னர் தட்டு பலர் கை மாறியது , யாரும் தட்டின் பின்பக்கத்தை கவனிக்கவே இல்லை, முன்பக்கம் எப்போதும் போல பளபளப் பாகவே இருந்தது.  இது போலத்தான் இந்தியாவும் வல்லரசாகிக்கொண்டேஇருக்கிறது.
--முற்றும்


அன்னாஹசாரே ஊழழை எதிர்த்து
நியாயம் வேண்டி
உண்ணாவிரதம் இருந்தார்
எங்கள் வீட்டில்
ஒரு வாரமாக நாங்கள்
உணவு வேண்டி
உண்ணாவிரதம் இருக்கிறோம்.

அவருக்கு நியாயம் கிடைத்தது
எங்களுக்கு இன்னும்
உணவு கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment

சொலவடை