சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

அழகான அமுல்யாவின் கதை



எல்லாக் குழந்தைகளையும் போல் நம் கதையின் நாயகி அமுல்யாவும் பத்து மாதத்தில்தான் பிறந்தாள். என்ன செய்ய இந்த அவசரமான உலகத்திலும் தன் குழந்தையை அமுல்யாவின் தாய் பெற்றெடுக்க பத்து மாதம் காத்திருக்க வேண்டியிருந்த்து. தாயின் வயிற்றில் இருக்கும் போதே அமுல்யா மடிக்கணினியின் சூட்டை உணர்ந்திருக்கிறாள். அவள் தாயின் மடி மேல் கணிணி, வயிறுக்குள் அமுல்யா.
     அமுல்யா பிறந்துவிட்டாள். பச்சிளங்குழந்தையின் மேல் வீசும் பால் வாடை நம் அமுல்யாவின் மீதும் வீசியது. ஆனால் அமுல்யா குடித்த்து அவல் தாயின் மாரில் அல்ல, தாய் பாலுக்கென்று நியமிக்கப் பட்ட அவள் பணிப்பெண்ணின் மாரில். தாய்ப்பால் கொடுத்தால் மாரழகு கெட்டுவிடும் என்று அமுல்யாவின் தாய் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் படித்திருக்கிறாள்.
அமுல்யாவிற்க்கு இப்போது இரண்டரை வயது. அமுல்யா பேசத் தொடங்கினாள். அவள் மழலை மொழி கூட ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று அவள் வீட்டார் நினைத்தனர். என்ன செய்ய அமல்யா வாயில் இருந்தோ ம்மா ம்மா என்று தமிழில் தான் வந்த்து. அவர்கள் அதை மாம் மாம் என்று ஆங்கிலமாக் எடுத்துக் கொண்டார்கள். அமுல்யா தூங்கிய பின் ஒருவர் வீட்டுக்கு வருவதும் , அவ்ள் காலையில் விழிக்கும் முன்னரே செல்வதுமாக ஒருவர் இருந்தார், அவர் பெரும்பாலும் அமுல்யாவின் தந்தையாகவே இருக்க்க் கூடும். அமுல்யாவைக் கொஞ்சுவதற்கு இயந்திர பொம்மைகளும், பஞ்சினால் ஆன கரடிகளும் நியமிக்கப்பட்டன. ஆனால் அவை செய்வதையே திரும்பத் திரும்பச் செய்வதால் அமுல்யா அவைகளை அப்பால் தள்ளிவிடுவாள்.
அமுல்யாவிற்கு ஊட்டச்சத்து மிக்க பானங்கள் கொடுக்கப்பட்ட்து. உடல் அளவில் அமுல்யா வளர்க்கப்பட்டாள். சராசரியாக ஒரு நான்கு வயது குழந்தை என்ன செய்யும், பஞ்சுக் கரடிகளுடன் கொஞ்சி விளையாடும். பலூனை பல்லால்கடித்து உடைக்கச் செய்யும். கண்ணை கட்டி கண்ணாமூச்சி விளையாடும். ஆனால் அமுல்யாவோ கணிணி விளையாட்டு விளையாட பழக்குவிக்கப் பட்டிருந்தாள்.
 இதோ அமுல்யாவிற்கு ஐந்து வயதாகி விட்ட்து. மேற்குடியில் பிறந்த எல்லாக் குழந்தையையும் போல் அமுலயாவும் மலைப் பிரதேசத்தில் உள்ள ஒரு கான்வென்ட்டில் சேர்க்கப் பட்டாள். அவள் பெற்றோருக்கு அவள் எதை கற்றாலும் கற்காவிடிலும் கவலை இல்லை ஆனால் அவள் மெமரியில் இருந்து தமிழ் துப்பரவாக ஃபார்மட் செய்ய்ப் படவேண்டும். நண்பர்களே கவனியுங்கள் மெமரி, ஃபார்மட் என்பது கணிணி மொழி.  அவர்கள் பேச்சில் கணிணி மொழி பெரும்பாலும் கலந்தே இருக்கும்.
அமுல்யா மற்ற குழந்தைகளுடன் அவ்வளவாக நெருங்கிப் பழகாமலே இருந்தாள். அவளை சுற்றி வீசும் காற்றில் ஈரப்பதம் கலந்திருந்த்து. அது அவளின் கண்ணீரில் இருந்து எழுந்தாக இருக்கலாம். அமுல்யாவிற்கு அந்த கான்வெண்ட் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அமுல்யாவின் கான்வெண்ட்டில் இருந்து ஒரு நாள் இனபச்சுற்றுலா அழைத்து சென்றார்கள். அமுல்யாவை பொறுத்தவரை அது ஒரு சுற்றுலா அவ்வளவே. குழந்தைகள் சொகுசுப் பேருந்தில் ஏற்றபட்டார்கள். சில குழந்தைகள் சன்னலோர இருக்கையை தேடி ஓடி உக்காந்துகொண்டார்கள். அமுல்யாவோ கிடைத்த இருக்கையின் நுனியில் உட்கார்ந்து கொண்டாள்.
மலையின் உச்சிக்கு செல்ல செல்ல குளிரும், குழந்தைகளிடம் குதூகலமும் அதிகரித்த்து. அமுல்யா இப்போதும் தலை குனிந்தே உட்கார்ந்து வந்தாள். குழந்தைகள் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு சாரை சாரையாக அழைத்துச் செல்லப் பட்டார்கள். ஒரு மணி நேரம் சுற்றி பார்த்த பின் குழ்ந்தைகளை எண்ணியபடி ஆசிரியர் பேருந்துக்குள் ஏற்றுகிரார். குழந்தைகளின் எண்ணிக்கையில் ஒன்று குறைய அது அமுல்யாதான் என்று அறியப்படுகிறது.
பல நேர தேடுதலுக்குப்பின் ஆசிரியர் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியப் படுத்துகிறார். பள்ளி நிர்வாகம் காவல் துறைக்கு புகார் செய்துவிட்டு அமுல்யாவின் பெற்றோருக்கும் தெரியப்படுத்துகிறது. அமுல்யாவின் தந்தையின் தொலைபேசிக்கு அழைத்த போது அவர் மிகவும் பிஸியாக இருப்பதாகவும், தலை போற காரியமாக இருந்தாலும், சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளுமாறும் சொன்னது ஒரு இயந்திரக் குரல்.
 அமுல்யாவின் தாய்க்கும் தகவல் சொல்லப்பட்ட்து. அவள் மிகவும் நிதானமானவள். மேலாண்மையில் மேற்படிப்பு படித்தவள். பொறுமையாக விஷயத்தை கேட்டுக் கொண்டாள். இந்த விஷயத்தை தன் நண்பர்களுக்கும் தெரிவிப்பதுதான் முறை என்று, தன் குழந்தை அமுல் குட்டியை காணவில்லை என்று ஃபேஸ்புக்கில் தன் ஸ்டேட்டஸ் ஆக அப்டேட் செய்தாள். அதற்கும் சில ஜீவன்கள் விளையாடாதே என்றும், கவலைப் படாதே என் குழந்தையும் அவ்வப்ப்போது இது போல காணாமல் போய் பின் வீடு திரும்பிவிடுவாள் என்று கம்மெண்ட் செய்திருந்தனர்.
இரண்டு நாட்களாகியும் அமுலயா இன்னும் தொலைந்து போனவளாகவே இருந்தாள். அமுல்யாவின் காண்வெண்ட் வாசலில் ஒரு சிகப்பு நிற மேல்நாட்டு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய பெண்மணிக்கு அப்படியே அமுல்யாவின் ஜாடை. ஆனால் அவளுடன் வந்தவனுக்கு அமுல்யாவின் ஜாடை சுத்தமாக இல்லை. அவனின் தோள் மேல் சாய்ந்து கொண்டே அவள் கலங்கிய கண்களுடன் பள்ளி அலுவலகத்தை நோக்கி நடந்தாள்.
இது நடந்து கொண்டிருந்த அதே வேளையில் மேலும் ஒரு வெள்ளை நிற கார் வந்து நின்றது. அதில் இருந்து அலைபேசியை காதில் வைத்து வியாபாரம் பேசியவாறே ஒருவர் இறங்கினார். அவர் தான் அமுல்யா தன் தாயின் வயிற்றில் கருவாக உருவாக காரணமானவர், தந்தை என்றும் வைத்துக் கொள்ளலாம். அவ்ருடன் வந்த பெண்மணி தன் உடையையும், சிகையையும் சரி செய்தவாறே அவர் கைகோர்த்துக் கொண்டாள். அமுல்யாவின் தந்தையும் தாயும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர். ஆனால் சண்டை போடவில்லை. பொது இடத்தில் சண்டை போடுவது அநாகரீகம் என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் பலமுறை அமுல்யாமுன் சண்டை போட்டதுண்டு.  



அமுல்யாவின் தந்தையும் தாயும் வெகுநேரம் பள்ளி நிர்வாகத்துடன் வழக்காடிவிட்டு தங்கள் துணையுடன் திரும்பிச் சென்றனர். அமுல்யாவின் தந்தை சற்று கோபமாகவே இருந்தார். இங்கு வந்ததினால் அவருக்கு முக்கியமான ஒரு மீட்டிங் ரத்தாகிவிட்டதாம். அவருடன் வந்தவள் அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தாள்.  
அது சரி நம்ம அமுல்யா எங்க போனா? காலத்தால் கொஞ்சம் பின்னோக்கிச் செல்வோம் வாங்க. இனபச்சுற்றுலா அன்று ஒரு குட்டி நாய் அமுல்யாவின் குதி காலை நுகர்ந்த்து. அதை பிடிக்க முயன்ற அமுல்யா அந்த நாயின் பின்னாலேயே சென்று வழி தவறி காட்டுப் பாதைக்குள் நுழைந்தாள். அந்த காட்டினுள் அமையப் பெற்றிருந்த மலைவாழ் வேடர்களின் குடிசைக்குள் நுழைந்தாள். அங்கே இருந்த மலைசாதி குழைந்தைகள் அவளுக்கு தேன் தந்தனர். அவளுக்கு கிச்சு கிச்சு மூட்டினர். அங்கிருந்த எல்லோருக்கும் அமுல்யாவைப் பிடித்துவிட்டது. அமுல்யாவை தூக்கிக் கொஞ்சினர். சிலர் முத்தமும் தந்தனர். அநேகமாக இதுதான் அமுலயாவின் முதல் முத்தம் என்று நினைக்கிறேன். அமுல்யாவிற்கு முத்தம் என்றால் என்ன என்று இப்போது தெரியும். இபோதெல்லாம் அவள் பட்டாம் பூச்சியை விரட்டிப் பிடிக்கிறாள். அதன் வண்ணம் அவள் கைகளில் ஒட்டிக்கொள்ளும்போது அது கலையாமல் பார்த்துக் கொள்கிறாள். பூக்களின் வாசனை அமுல்யாவிற்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அமுல்யா ஓடுகிறாள், குதிக்கிறாள், சிரிக்கிறாள். மலைவாழ் குழந்தைகளுடன் கண்ணாமூச்சி கூட விளையாடுகிறாள். மழையில் நனைகிறாள். மண் வாசனை அவளுக்கு குதூகலத்தை தருகிறது. வானவில் அவளுக்கு வியப்பைத் தருகிறது. அமுல்யா சிரிக்கும்போது அவள் கன்னத்தில் குழி விழுவது எனக்கே இப்போதுதான் தெரியும்.
இது ஒருபுறமிருக்க அமுல்யாவின் தந்தை தன் வழக்கறிஞருடன் பள்ளி மீது நஷ்ட ஈடு தொடுப்பது எப்படி என்று ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார். அமுல்யாவின் தாய் முகநூலில் மூழ்கி தன் சோகத்தை தீர்த்துக் கொள்கிறாள். காவல் துறையோ சட்டம் தன் கடமையை செய்யும் என்று தொலைகாட்சிகளுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிற்து.

No comments:

Post a Comment

சொலவடை