சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

ஒரு கல்லூரி - ஒரு தற்கொலை - நான்கு மர்மங்கள்


                               பூட்டிய கதவு உடைக்கப்படும் சத்தம் ,நண்பர்களின் அலறல் சத்தம், ஆம்புலன்சின் சைரென் சத்தம் , அந்த விடுதியின் ஓர் அறையில் ஒரே கூட்டம், கண் பிதுங்கிய நிலையிலும், நாக்குத் தள்ளிய நிலையில் கிடந்தான் அவன். போலீசுக்கு தகவல் சொல்லப் பட்டது. கூடியவர்கள் ஒவ்வொருவரும் ,ஒருவாறு பேசிக் கொண்டனர். சிலர் லவ் பெயில்யர் என்றனர், மேலு சிலர் வயிற்று வலிக் கூட காரணமாக இருக்கலாம் என்றனர், அவனுடன் படிக்கும் மாணவர்கள் அழுது கொண்டிருந்தனர். இது நடந்து ஒரு மாதம் ஆகியும் காரணம் கண்டுபிடிக்கப் படவில்லை. அந்த கேஸ் இன்ஸ்பெக்டர் துரைசிங்கத்திடம் ஒப்படைக்கப் பட்டது. மாணவர்களை ஒவ்வொருவராக அழைத்து விசாரிக்கத் தொடங்கினார் சிங்கம், முதல் மாணவன் "சார் அவனுக்கு இன்டெர்னல் மார்க் கம்மியா இருந்தது,புலம்பிக் கிட்டே இருப்பான் வேற எதவும் எனக்கு தெரியாது சார் " என்றான். பலரை அழைத்து விசாரித்த துரை சிங்கம். முடிவாக , அந்த பையன்  யாரை கடைசியாக சந்தித்தானோ அந்த பையனிடம் சென்றார். சிங்கம்," அந்த பையன் சாகுறதுக்கு நாலு மணி நேரம் முன்னாடி உங்க ரூமுக்கு தான் வந்தான் இல்லையா", பையன்," ஆமா சார், ரொம்பநேரம் பேசிக்கிட்டு இருந்தோம் சந்தோசமா தான் இருந்தான், ஏன் இப்டி பண்ணினான்னு தெரில சார், " பையன் சொல்லும் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டே வந்தார் சிங்கம். பையனை பார்த்து சிங்கம் ,"  பைய்யன் உன் ரூமுக்கு பேசுறதுக்காக வந்தானா இல்ல வேற ஏதாவது விஷயமா வந்தானா?" , "சார் அக்சுவலா அன்னிக்கி ரொம்ப குஷியா இருந்தான் , பென்டிரைவ்ல ஏதாவது படம் காப்பி பண்ணி தர சொன்னான்" சிங்கம் குறிப்பெடுத்துக் கொண்டார் ," சோ பைய்யன் சாகுறதுக்கு முன்னாடி படம் பாத்து இருக்கான், உன்கிட்ட என்ன படம் வாங்கிட்டு போனான்னு சொல்ல முடியுமா தம்பி" , பையன்," ஸ்யுர் , சார் நாலு படம் குடுத்து விட்டேன், சுறா, விண்ணைத் தாண்டி வருவாயா?, அசல், அப்புறம் சூர்யா நடிச்ச சிங்கம்னு நினைக்கிறேன் சார்", துரை சிங்கம் தன் கேஸ் முடிவுக்கு வந்தது என்று குறிபெடுத்துக் கொண்டு அந்த முன்னணி நடிகரின் வீட்டை நோக்கி தன் காரை செலுத்தினார்.

சிங்கம் யார் வீட்டுக்கு போயிருப்பார்? ,நீங்களே இந்த மிஸ்ட்ரிய சால்வ் பண்ணிக்குங்க

No comments:

Post a Comment

சொலவடை