சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

நான் ஏடிஎம் பேசுகிறேன்


எல்லோருக்கும் வணக்கம். நான் ஏடிஎம் பேசுறேன். தமிழ்ல சொல்லப்போனா பணம் எடுக்கும் இயந்திரம். மனிதர்களுக்கு பிடித்தமான இயந்திரமாகிய எனக்கு உங்களிடம் பேசவேண்டிய நேரம் வந்திருக்கு. வழக்கமா கார்ட எனக்குள்ள போட்டவுடனேயே உங்க பேர கண்டுபிடிச்சி உங்களுக்கு ஹலோ சொல்லுவேன். பதிலுக்கு இது வரைக்கும் யாரும் எனக்கு ஹாய் சொன்னதில்லை. அதெப்பிடி தெரிஞ்ச மனுசங்களையே பாத்தும் பாக்காதமாதிரி போற நீங்க என்னை எப்பிடி கண்டுக்குவீங்க.  என் வயிரு நிறைய உங்களோட குப்பைதான். அதுக்குத்தான் பணம்னு ஏதோ பேரு வச்சிருக்கீங்களே. நாங்கூட எனக்குத்தான் இவ்வளவு பாதுகாப்பும் ஒரு ஏசி ரூமும்னு நினச்சேன். ஆனா எனக்குள்ள இருக்கிற காகிததுக்குத்தான் இவ்வளவு மதிப்புன்னு அப்புறமா தெரிஞ்சிகிட்டேன். ஒரு நாள் எனக்கு காவலா இருக்குற வாட்சுமேன் என்கிட்ட வந்து பொலம்புனாரு. அவரு பொண்ணுக்கு கல்யாணமாம், கையில பணம் இல்லையாம். அவர நம்பி யாரும் கடன் தரலயாம். என்கிட்ட நிறையா பணம் இருந்தும் அவருக்கு கொடுக்க முடியல. என்கிட்ட இருந்து பணம் எடுத்துட்டுப் போறவங்க ஒவ்வொருத்தோரட முகத்தையும் நான் கவனிச்சிட்டுத்தான் இருக்கேன். சம்பளப்பணத்த சிரிச்சிட்டே எடுப்பாங்க , கடனை திருப்பிக் கொடுக்கும்போது கடுப்போட எடுப்பாங்க. எத்தனையோ மழை இரவுகளில் என் வாசல் வந்து பல பேர் தங்கியிருக்காங்க. ஒரு மெஷின் எனக்கு ஏசி ரூம் தந்துருக்கீங்க. ஆனா உங்கள்ல பல பேரு வீடே இல்லாம இருக்காங்க. பணம் இருக்குறவரைக்கும் தான் எனக்கு மதிப்பு. அந்த வகையில என்னைப்போல நடமாடும் ஏடிம் உங்கள்ல நிறைய பேர் இருக்காங்க. நிறைய பேசனுமுன்னு இருந்தேன் அதுக்குள்ள இங்க ஒருத்தன் என் வாயில கார்ட அமுக்கி பணம் எடுக்க வந்துட்டான். அதனால இத்தோட நிறுத்திக்கிறேன்.

No comments:

Post a Comment

சொலவடை