சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

செருப்புக் கவிதைகள்


இவ்விடம் சிறந்த முறையில் செருப்பைப் பற்றி கவிதைகள் எழுதி தரப்படும் 

கவிழ்ந்திருந்த என் செருப்பின்
தீக்காயங்களை வைத்தே
கண்டுபிடித்துவிட்டார்
அப்பா
நான் சிகரெட் பிடிப்பதை ...

அப்பா எங்களுக்காக
கடந்து வந்த பாதயை
காட்டிகிறது
அவர் செருப்பில் தைத்திருந்த
முள்ளும் ,சாணமும் ...

அப்பாவின் உழைப்பை அளக்க
ஆண்டவன் தந்த
அற்புத கருவி
அவரின் தேய்ந்த செருப்பு
எங்களுக்காக அவர் தேய்கிறார் அப்பாக்காக அவர் செருப்பு தேய்கிறது ...


அவளை பற்றி மட்டும்
கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன்
இப்போது அப்பாவின் செருப்பை
பற்றி எழுதுகிறேன்
அதை விட இது தேவலாம் என்பதால்.

ஜோடி செருப்புகள் குறிக்கின்றன
ஆணையும் பெண்ணையும்
ஒற்றை செருப்பால்
உலகிற்கு பயனில்லை

பின்குறிப்பு: இந்த கவிதைகள் எழுதிய அடுத்த நாளே என் செருப்புகள் களவாடப் பட்டன.

No comments:

Post a Comment

சொலவடை