சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

59 ஆவது தேசிய விருதுகள்



கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் இந்திய நாட்டின் ஆஸ்கர் விருதான தேசிய விருதுகளை தமிழ் சினிமா உலகம் அள்ளி இருக்கிறது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதும், சிறந்த படத்தொகுப்பிற்கான விருதும் ஆரண்ய காண்டம் பட்த்திற்கு கிடைத்துள்ளது.

சிறந்த பொழுதுபோக்கு மற்றும் சிறந்த துணைநடிகருக்கான விருதுகளை அழகர்சாமியின் குதிரை படம் அள்ளியிருக்கிறது.
தமிழில் சிறந்த படத்திற்கான விருதை வாகை சூடவா எதிர்பார்த்தபடியே வாங்கிவிட்டது.

ஒவ்வொரு தேசிய விருதின் போதும் தமிழ் சினிமா விருதுகளை அள்ளிக் குவிக்கும் போது தமிழன் என்ற முறையில் புல்லரிக்கிறது. ஆனால் மேற்குறிப்பிட்ட படங்களில் எத்த்னை படங்களை நாம தியேட்டர் போய் பார்த்திருக்கோம். ஏன் ஆரண்ய காண்டம்னு ஒரு படம் வந்த்தே பல பேருக்கு தெரியாதே. தமிழில் உள்ள பல நல்ல ரசிகர்களும் திரை விமர்சகர்களும் இந்த மூன்று படங்களையும் தூக்கி கொண்டாடிய போதிலும் இப்படங்கள் வியாபார ரீதியாகவும் பெரிய வெற்றியை அடையவில்லை. இப்போக் கூட இந்த புல்லரிப்பு நமக்கு ஒரு வாரம் இருக்குமா? அதுக்கப்புறம் சிங்கம், சிறுத்தை, கரடி, யானை போன்ற விலங்கீனப் படங்களே நம்ம பாக்ஸ் ஆபீஸ்ல இடம் பிடிக்கும்.

ஆக இந்த வருடத்திலிருந்தாவது கொஞ்சம் பகுத்தறிவுடன் நல்ல படங்களை தியேட்டர் சென்று பார்ப்போம். ஃபேஸ்புக் ட்விட்டர் மூலமாக மற்றவர்களுக்கும் நல்ல படங்களை பார்க்க பரிந்துரை செய்வோம்.

No comments:

Post a Comment

சொலவடை